2430கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாராவகை அறிந்தேன் ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு                (50)