244கன்னி நன் மா மதில் சூழ்தரு பூம்பொழிற்
      காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா
      பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே
      ஊட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை
      என்குட்டனே முத்தம் தா (2)