245காடுகள் ஊடு போய்க் கன்றுகள் மேய்த்து
      மறியோடிக் கார்க்கோடற்பூச்
சூடி வருகின்ற தாமோதரா கற்றுத்
      தூளி காண் உன் உடம்பு
பேடை மயிற் சாயற் பின்னை மணாளா
      நீராட்டு அமைத்து வைத்தேன்
ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன்
      உன்னோடு உடனே உண்பான் (3)