247பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை
      வாய்வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா
      சிறுக்குட்டச் செங்கண் மாலே
சிற்றாடையும் சிறுப்பத்திரமும் இவை
      கட்டிலின் மேல் வைத்துப் போய்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக்
      கலந்து உடன் வந்தாய் போலும் (5)