250கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா
      கோவலர் இந்திரற்குக்
காட்டிய சோறும் கறியும் தயிரும்
      கலந்து உடன் உண்டாய் போலும்
ஊட்ட முதல் இலேன் உன்தன்னைக் கொண்டு
      ஒருபோதும் எனக்கு அரிது
வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா உன்னை
      அஞ்சுவன் இன்று தொட்டும்             (8)