251திண் ஆர் வெண்சங்கு உடையாய் திருநாள் திரு
      வோணம் இன்று எழு நாள்;முன்
பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப்
      பல்லாண்டு கூறுவித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தது
      அரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல்
      கோலம் செய்து இங்கே இரு (9)