253தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்
      தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி
குழல்களும் கீதமும் ஆகி எங்கும்
      கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு
மழைகொலோ வருகின்றது என்று சொல்லி
      மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்
      உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே (1)