254வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு
      வசை அறத் திருவரை விரித்து உடுத்து
பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி
      பணைக்கச்சு உந்தி பல தழை நடுவே
முல்லை நல் நறுமலர் வேங்கை மலர்
      அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே
எல்லியம் போதாகப் பிள்ளை வரும்
      எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே            (2)