256 | குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்க் குழல் ஊதி ஊதிக் கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்து உடன் வருவானைத் தெருவிற் கண்டு என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டறியேன் ஏடி வந்து காணாய் ஒன்றும்நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே (4) |
|