2580 | ஊழிதோறு ஊழி ஓவாது வாழிய என்று யாம் தொழ இசையுங்கொல் யாவகை உலகமும் யாவரும் இல்லா மேல் வரும் பெரும்பாழ்க் காலத்து இரும் பொருட்கு எல்லாம் அரும் பெறல் தனி வித்து ஒரு தான் ஆகி தெய்வ நான்முகக் கொழு முளை ஈன்று முக்கண் ஈசனொடு தேவு பல நுதலி மூவுலகம் விளைத்த உந்தி மாயக் கடவுள் மா முதல் அடியே? (4) |
|