2581 | மா முதல் அடிப் போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடிப் போது ஒன்று விண் செலீஇ நான்முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப வானவர் முறைமுறை வழிபட நெறீஇ தாமரைக் காடு மலர்க் கண்ணொடு கனி வாய் உடையதும் ஆய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன கற்பகக் காவு பற்பல அன்ன முடி தோள் ஆயிரம் தழைத்த நெடியோய்க்கு அல்லது அடியதோ உலகே? (5) |
|