259சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த்
      தன் திருமேனிநின்று ஒளி திகழ
நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால்
      அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே
கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்
      குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை
      அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே             (7)