261வலங் காதில் மேல்-தோன்றிப் பூ அணிந்து
      மல்லிகை வனமாலை மௌவல் மாலை
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத்
      தீங்குழல் வாய்மடுத்து ஊதி ஊதி
அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை
      அழகு கண்டு என்மகள்
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர்
      வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே             (9)