262 | விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு இளஆய்க் கன்னிமார் காமுற்ற வண்ணம் வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே (10) |
|