272கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள்
      கோலமும் அழிந்தில வாடிற்று இல
வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல
      மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்
முடி ஏறிய மா முகிற் பல் கணங்கள்
      முன் நெற்றி நரைத்தன போல எங்கும்
குடி ஏறி இருந்து மழை பொழியும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (10)