274நாவலம் பெரிய தீவினில் வாழும்
      நங்கைமீர்கள் இது ஓர் அற்புதம் கேளீர்
தூ வலம்புரி உடைய திருமால்
      தூய வாயிற் குழல்-ஓசை வழியே
கோவலர் சிறுமியர் இளங் கொங்கை
      குதுகலிப்ப உடல் உள்-அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறுமாலை
      ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே             (1)