275 | இட அணரை இடத் தோளொடு சாய்த்து இருகை கூடப் புருவம் நெரிந்து ஏறக் குடவயிறு பட வாய் கடைகூடக் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது மட மயில்களொடு மான்பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ உடை நெகிழ ஓர்கையால் துகில் பற்றி ஒல்கி ஓடு அரிக்கண் ஒட நின்றனரே (2) |
|