276வான் இளவரசு வைகுந்தக்
      குட்டன் வாசுதேவன் மதுரைமன்னன் நந்த-
கோன் இளவரசு கோவலர் குட்டன்
      கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி
      மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்பத்
தேன் அளவு செறி கூந்தல் அவிழச்
      சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே (3)