முகப்பு
தொடக்கம்
277
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்
தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக்
கானகம் படி உலாவி உலாவிக்
கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது
மேனகையொடு திலோத்தமை அரம்பை
உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
வானகம் படியில் வாய் திறப்பு இன்றி
ஆடல் பாடல் இவை மாறினர் தாமே (4)