279செம் பெருந் தடங்- கண்ணன் திரள் தோளன்
      தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம் பரமன் இந்நாள் குழல் ஊதக்
      கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்
      அமுத கீத வலையால் சுருக்குண்டு
நம் பரம் அன்று என்று நாணி மயங்கி
      நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே            (6)