280புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்
      பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத
      அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப
அவியுணா மறந்து வானவர் எல்லாம்
      ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்
செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து
      கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே            (7)