2810ஒன்று எனப் பல என அறிவு அரும்
      வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன்
      அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும்
      இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வது அவனிடை
      நம்முடை நாளே   (7)