2811நாளும் நின்று அடு நம பழமை அம்
      கொடுவினை உடனே
மாளும் ஓர் குறைவு இல்லை மனன் அகம்
      மலம் அறக் கழுவி
நாளும் நம் திரு உடை அடிகள் தம்
      நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு
      மாள்வது வலமே   (8)