2812வலத்தனன் திரிபுரம் எரித்தவன்
      இடம்பெறத் துந்தித்
தலத்து எழு திசைமுகன் படைத்த நல்
      உலகமும் தானும்
புலப்பட பின்னும் தன் உலகத்தில்
      அகத்தனன் தானே
சொலப் புகில் இவை பின்னும் வயிற்று உள
      இவை அவன் துயக்கே   (9)