2813துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்
      அமரரைத் துயக்கும்
மயக்கு உடை மாயைகள் வானிலும்
      பெரியன வல்லன்
புயல் கரு நிறத்தனன் பெரு நிலங்
      கடந்த நல் அடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன்
      வணங்குவன் அமர்ந்தே   (10)