2814அமரர்கள் தொழுது எழ அலை கடல்
      கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச்
      சடகோபன் குற்றேவல்கள்
அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள்
      இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம்
      பிறவி அம் சிறையே   (11)