282திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன்
      செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்
      ஊதுகின்ற குழல்-ஓசை வழியே
மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து
      மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா
      எழுது சித்திரங்கள் போல நின்றனவே             (9)