முகப்பு
தொடக்கம்
2827
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி
இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம்
புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லாப் பொருள்கட்கும்
வித்துஆய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை
மாசூணாதோ? மாயோனே (2)