2827நினைந்து நைந்து உள் கரைந்து உருகி
      இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம்
      புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லாப் பொருள்கட்கும்
      வித்துஆய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை
      மாசூணாதோ? மாயோனே   (2)