2829தான் ஓர் உருவே தனி வித்து ஆய்
      தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
      மற்றும் மற்றும் முற்றும் ஆய்
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே
      தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா மாயன்
      வைகுந்தன் எம் பெருமானே   (4)