முகப்பு
தொடக்கம்
2829
தான் ஓர் உருவே தனி வித்து ஆய்
தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
மற்றும் மற்றும் முற்றும் ஆய்
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே
தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா மாயன்
வைகுந்தன் எம் பெருமானே (4)