2830மான் ஏய் நோக்கி மடவாளை
      மார்பில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய உண்டை வில்
      நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணிவண்ணா
      மதுசூதா நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம்
      சேருமாறு வினையேனே   (5)