2831வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்
      விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே
      மா மாயனே மாதவா
சினை ஏய் தழைய மராமரங்கள்
      ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய்
      என்று நைவன் அடியேனே     (6)