2836மாலே மாயப் பெருமானே
      மா மாயவனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால்
      மன்னு குருகூர்ச் சடகோபன்
பால் ஏய் தமிழர் இசைகாரர்
      பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும்
      வல்லார்க்கு இல்லை பரிவதே   (11)