284 | குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தனுடைய கோமள வாயிற் குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக் கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக் குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் குழலை வென்ற குளிர் வாயினராகிச் சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே (11) |
|