2871சூழல் பலபல வல்லான்
      தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்று ஆகி இடந்த
      கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான்
      விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்
      அவன் என் அருகவிலானே   (2)