2877நாவினுள் நின்று மலரும்
      ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே
      அழிப்போடு அளிப்பவன் தானே
பூ இயல் நால் தடம் தோளன்
      பொரு படை ஆழி சங்கு ஏந்தும்
காவி நன் மேனிக் கமலக்
      கண்ணன் என் கண்ணின் உளானே   (8)