2879நெற்றியுள் நின்று என்னை ஆளும்
      நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்
கற்றைத் துழாய் முடிக் கோலக்
      கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை அணிந்தானும்
      நான்முகனும் இந்திரனும்
மற்றை அமரரும் எல்லாம்
      வந்து எனது உச்சியுளானே   (10)