2947வைகுந்தா மணிவண்ணனே என் பொல்லாத்
      திருக்குறளா என்னுள் மன்னி
வைகும் வைகல் தோறும் அமுது ஆய வான் ஏறே
      செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து
அசுரர்க்குத் தீமைகள்
      செய் குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.             (1)