2949தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை
      துழாய் விரைப்
பூ மருவு கண்ணி எம் பிரானை பொன்மலையை
      நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம்
மகிழ்ந்து ஆட நாவு அலர்
      பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே             (3)