2950வள்ளலே மதுசூதனா என் மரகத மலையே
      உனை நினைந்து
எள்கல் தந்த எந்தாய் உன்னை எங்ஙனம் விடுகேன்
      வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்
பாடிக் களித்து உகந்து உகந்து
      உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே?             (4)