2952உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை
      பாடி ஆடி என்
முன்னைத் தீவினைகள் முழு வேர் அரிந்தனன் யான்
      உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல்
மார்வம் கீண்ட என்
      முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே?             (6)