2955எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை
      செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா <
      கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை
என்னுள்ளே குழைத்த எம்
      மைந்தா வான் ஏறே இனி எங்குப் போகின்றதே?             (9)