296நல்லது ஓர் தாமரைப் பொய்கை
      நாண்மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
      அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறியோடிற்றாலோ
      என்மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின்போய்
      மதுரைப் புறம் புக்காள் கொல்லோ? (1)