முகப்பு
தொடக்கம்
297
ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத
உருவறைக் கோபாலர் தங்கள்
கன்று கால் மாறுமா போலே
கன்னி இருந்தாளைக் கொண்டு
நன்றும் கிறி செய்து போனான்
நாராயணன் செய்த தீமை
என்றும் எமர்கள் குடிக்கு ஓர்
ஏச்சுக்கொல்? ஆயிடுங் கொல்லோ? (2)