முகப்பு
தொடக்கம்
298
குமரி மணம் செய்து கொண்டு
கோலம் செய்து இல்லத்து இருத்தி
தமரும் பிறரும் அறியத்
தாமோதரற்கு என்று சாற்றி
அமரர் பதியுடைத் தேவி
அரசாணியை வழிபட்டு
துமிலம் எழப் பறை கொட்டித்
தோரணம் நாட்டிடுங் கொல்லோ? (3)