298குமரி மணம் செய்து கொண்டு
      கோலம் செய்து இல்லத்து இருத்தி
தமரும் பிறரும் அறியத்
      தாமோதரற்கு என்று சாற்றி   
அமரர் பதியுடைத் தேவி
      அரசாணியை வழிபட்டு
துமிலம் எழப் பறை கொட்டித்
      தோரணம் நாட்டிடுங் கொல்லோ?            (3)