299ஒரு மகள் தன்னை உடையேன்
      உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
      செங்கண் மால் தான் கொண்டு போனான்
பெரு மகளாய்க் குடி வாழ்ந்து
      பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமகளைக் கண்டு உகந்து
      மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ?             (4)