முகப்பு
தொடக்கம்
301
வேடர் மறக்குலம் போலே
வேண்டிற்றுச் செய்து என்மகளைக்
கூடிய கூட்டமே யாகக்
கொண்டு குடி வாழுங் கொல்லோ?
நாடும் நகரும் அறிய
நல்லது ஓர் கண்ணாலம் செய்து
சாடு இறப் பாய்ந்த பெருமான்
தக்கவா கைப்பற்றுங் கொல்லோ? (6)