முகப்பு
தொடக்கம்
3044
ஒளி மணி வண்ணன் என்கோ?
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ?
நான்முகக் கடவுள் என்கோ?
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே (8)