3046யாவையும் எவரும் தானாய்
      அவரவர் சமயம் தோறும்
தோய்வு இலன் புலன் ஐந்துக்கும்
      சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவி சேர் உயிரின் உள்ளால்
      ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்
      அவனையும் கூடலாமே             (10)