முகப்பு
தொடக்கம்
3046
யாவையும் எவரும் தானாய்
அவரவர் சமயம் தோறும்
தோய்வு இலன் புலன் ஐந்துக்கும்
சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்
அவனையும் கூடலாமே (10)