3047கூடி வண்டு அறையும் தண் தார்க்
      கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர்
      வண் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள்
      இவையும் ஓர் பத்தும் வல்லார்
வீடு இல போகம் எய்தி
      விரும்புவர் அமரர் மொய்த்தே             (11)