3048மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை
      முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
      கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
      எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மாம் கருமம் என்? சொல்லீர்
      தண் கடல் வட்டத்து உள்ளீரே             (1)